ஆந்திர முதல்வரின் அகால மரணத்திற்கு இரங்கல் - ஆந்திர திருச்சபை
செப். 4, 2009. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் அனைவரையும், சிறப்பாக
ஆந்திராவின் கிறிஸ்துவ சமூகத்தைப் பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஹைதராபாதிலிருந்து சித்தூருக்குப் பயணமான முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால்,
இந்த மரணம் நேர்ந்தது.
ஹைதராபாத் பேராயர் மாரம்பாடி ஜோஜி "ஆந்திராவுக்கு, சிறப்பாக,
ஆந்திராவின் கிறிஸ்துவ சமூகத்திற்கு இது ஒரு மாபெரும் இழப்பு. ராஜசேகர ரெட்டி ஏழைகளின்
முன்னேற்றத்திற்கு அரும் பாடு பட்டவர்." என்று குறிப்பிட்டார்.
பேராயர், ராஜசேகர
ரெட்டியுடன் மே மாதம் டெல்லிக்குப் பயணமானதையும், அங்கு தலித் கிறிஸ்துவ மக்களுக்கு உரிய
சலுகைகளைப் பெற்றுத் தர அரசிடம் முதல்வர் விண்ணப்பித்ததையும் நினைவு கூர்ந்தார். ஆந்திர
ஆயர் பேரவையின் சார்பில் முதல்வரது குடும்பத்திற்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக
பேராயர் கூறினார். இந்திய ஆயர் பேரவையும் தனது அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.