2009-09-03 16:50:09

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நில நடுக்கம் 


செப். 3, 2009. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் ஏற்பட்ட சுனாமியும் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கத்தோலிக்கத் திருச்சபை மீட்புப் பணியில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாக செய்திக்குறிப்பு ஒன்று சொல்கிறது.

இந்தோனேசிய ஆயர் பேரவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு குழுக்களை அனுப்பியுள்ளது என்றும் பல ஆயிரம் மக்கள் கோவில்களில் புகலிடம் அடைந்துள்ளனர் என்றும் அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.