குடியேற்றதாரரை வரவேற்காத ஒரு சமூகம் தன்னை ஒரு கிறிஸ்தவ சமூகம் என அழைத்துக் கொள்ள முடியாது,
குவாத்தமாலா ஆயர்
செப்.02,2009. குடியேற்றதாரரை வரவேற்காத ஒரு சமூகம் தன்னை ஒரு கிறிஸ்தவ சமூகம் என அழைத்துக்
கொள்ள முடியாது என்று குவாத்தமாலா ஆயர் பேரவையின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி
பணிக்குழுத் தலைவர் கூறினார்.
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் வருகிற ஞாயிறன்று
கடைபிடிக்கப்படும் தேசிய குடியேற்றதாரர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட சான் மார்கோஸ்
ஆயர் அல்வாரோ ரமாசினி இமேரி, குடியேற்றதாரர் மீதான கிறிஸ்தவர்களின் கடமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயிரக்கணக்கான
கிறிஸ்தவர்கள், குடியேற்றதாரர் எதிர்கொள்ளும் துன்பங்களையும் வேதனைகளையும் கனவுகளையும்
நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது.
அமெரிக்க
அரசுத் தலைவர் ஒபாமா உறுதியளித்துள்ள குடியேற்றதாரர் குறித்த சட்டச் சீர்திருத்தம் பற்றியும்
குறிப்பிட்டுள்ள குவாத்தமாலா ஆயர், இதனை நடைமுறைபடுத்துவதற்கு தற்போதைய உலகளாவிய பொருளாதார
பிரச்சனை ஒரு தடையாக காரணம் காட்டப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.