அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக்
கற்பித்து வந்தார்.32 அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில்
அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.33 தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த
ஒருவர் இருந்தார்.34 அவரைப் பிடித்திருந்த பேய், ' ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு
என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு
அர்ப்பணமானவர் ' என்று உரத்த குரலில் கத்தியது.35 ' வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ
' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து,
அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.36 எல்லாரும் திகைப்படைந்து,
' எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்;
அவையும் போய்விடுகின்றனவே! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.37 அவரைப்பற்றிய
பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.