திருத்தந்தை 16ம் பெனடிக்டின் காரித்தாஸ் இன் வெரித்தாத்தே திருமடலுக்குப் பிரிந்த கிறிஸ்தவ
சபையின் 68 தலைவர்கள் பாராட்டு
ஆக.29,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் காரித்தாஸ் இன் வெரித்தாத்தே அதாவது பிறரன்பில்
உண்மை என்ற அவரது அண்மை அப்போஸ்தலிக்கத் திருமடல் பற்றிய தங்களது பாராட்டுதல்களை பல நாடுகளின்
பிரிந்த கிறிஸ்தவ சபையின் 68 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாடு,
கானடா, இங்கிலாந்து, நெதர்லாந்து இலங்கை மற்றும் நியுசிலாந்தின், பல்கலைகழகத் தலைவர்கள்,
பேராசிரியர்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் என இவாஞ்சலிக்கல்
கிறிஸ்தவ சபைகளின் 68 தலைவர்கள் இணைந்து, அன்பில் உண்மையைச் செய்தல் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள
செய்தியில் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள்
திருத்தந்தையின் இத்திருமடலை வாசித்து அசைபோட்டு அன்பும் உண்மையும் என்ற இரட்டைச் சுவர்
மீது தங்கள் வாழ்வையும் தொழிலையும் வணிகத்தையும் அமைக்குமாறு இத்தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.