2009-08-29 15:03:04

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் அமலுக்கு வந்த மாற்றங்களை மெது மெதுவாக தளர்த்துவதற்குத் திருத்தந்தை முயற்சித்து வருகிறார் என்ற ஊடக வதந்திகளுக்கு அவரோடு மிக நெருக்கமாக இணைந்து பணிசெய்யும் திருச்சபை அதிகாரி ஒருவர் மறுப்பு


ஆக.29,2009. கத்தோலிக்கத் திருச்சபையில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் அமலுக்கு வந்த மாற்றங்களை மெது மெதுவாக தளர்த்துவதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முயற்சித்து வருகிறார் என்ற ஊடக வதந்திகளுக்கு அவரோடு மிக நெருக்கமாக இணைந்து பணிசெய்யும் திருச்சபை அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீட சார்பு தினத்தாளுக்கு இவ்வாரத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட, குறிப்பாக திருவழிபாட்டில் இடம் பெற்ற மாற்றங்களை மீண்டும் மாற்றுவதற்கு திருத்தந்தை முயற்சிக்கிறார் என்ற இத்தாலிய ஊடகங்களின் தவறான வதந்திகளை மறுத்துள்ளார் கர்தினால்.

திருத்தந்தையின் எண்ணங்களையும் செயல்களையும் உண்மையில்,புரிந்து கொள்வதற்கு இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் சார்ந்தவற்றில் உண்மையான செயல்பாட்டாளராக, அவர் காட்டிய ஈடுபாட்டை உள்ளடக்கிய அவரது சொந்த வரலாற்றை அறிவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 








All the contents on this site are copyrighted ©.