புலம்பெயர்வோரைச் சாவுக்குத் தள்ளாதீர்கள என்கிறார் கர்தினால் அந்தோனியோ மரிய ரூக்கோ
. உறவுக்கும் விடுதலைக்கும் என்று அமைக்கப்பட்ட ரிமிணி அமைப்பு கூட்டியிருந்த கருத்தரங்கில
பேசிய மாட்ரிட் நகரப்பேராயர் அவர் புலம் பெயர்வதற்கு உரிமை உள்ளதென்றும் , புலம் பெயர்வோரை
வரவேற்கும் நாடுகளில் வாழும் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு புலம் பெயர்வோருக்கு
அரவணைப்பும் பாதுகாப்பும் தரப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இத்தாலியில் ஒழுங்கில்லாது
புலம் பெயர்வது குற்றம் எனச் சட்டம் இயற்றப்பட்டதைப் பற்றியும் கூட்டத்தில் வாதம் செய்தனர்
. ஒரு நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாத போது வேறு நாட்டுக்குக் குடிபெயர உரிமை உள்ளது
எனவும் அவ்வாறு குடிபெயர்வதை சட்டங்களுக்கு உட்பட்டு வரவேற்கவேண்டும் எனவும் கர்தினால்
மரிய ரூக்கோ வலியுறுத்தினார் .