2009-08-27 20:18:31

புனித ஐந்தாவது செலஸ்டின் 880 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம். 270809 .


இவ்வெள்ளியன்று தொடங்கும் திருத்தந்தை புனித ஐந்தாவது செலஸ்டின் ஆண்டை முன்னிட்டு அப்புனிதரது புனிதப் பொருட்களுக்கு முன்னர் செபிப்பவரகளுக்கு சிறப்பான அருளை வழங்குவதாக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் சார்பாகத் தெரிவித்துள்ளது வத்திக்கான் திருப்பீடத்தின் கழுவாய் சார்ந்த மன்றம் . இந்த ஆகஸ்ட் 29 ல் தொடங்கும் புனித திருத்தந்தை செலஸ்டினுடைய 800 ஆவது ஆண்டு சிறப்புக் கொண்டாட்டங்கள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ல் முடிவுறும் என வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே தெரிவித்துள்ளார் . பியட்ரோ ஆஞ்சலேரி என்ற இயற்பெயரோடு 1209 ல் பிறந்த புனித செலஸ்டின் 1294 ல் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார் . 1296 ல் காலமானார். அவருடைய புனிதப் பொருட்கள் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லாக்குவிலாப் பகுதியில் திருப்பவனியாக எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் கர்தினால் பெர்த்தோனே தெரிவி்த்துள்ளார். திருத்தந்தை புனித செலஸ்டின் 5 மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தை பதிவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.