2009-08-21 20:03:15

மலேசியப் பத்திரிக்கை கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செய்தி210809


மலேசியாவில் இஸ்லாமிய பத்திரிகை அல் இஸ்லாம் என்பது கத்தோலிக்கர்களுக்கு எதிராக மேமாதம் செய்தி வெளியிட்டது . அதில் இரண்டு இஸ்லாமியச் செய்தித் தொடர்பாளர்கள் தேவ நற்கருணையை வாயில் பெற்றுப் பின்னர் வெளியே சென்று துப்பிவிட்டதாகவும் செய்தி வெளியிட்டது . இதற்கு எதிராக இரு கத்தோலிக்கர்கள் வழக்குத் தொடர்ந்தும் காவலர்கள் வழக்கைத் தொடராதது சிறுபான்மை மக்கள் மனத்தைப் புண்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளார்கள். மத , இனப் பாகுபாட்டைத் தூண்டுபவர்களைத் தண்டிப்பதாகக்கூறும் மலேசிய அரசு ஏதும் செய்யாதிருப்பது கவலை அளிப்பதாக யூகான் செய்தி வழியாக கத்தோலிக்கர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.