2009-08-20 12:46:16

முகாம் தமிழர்களை விரைவி்ல் சொந்த இடங்களுக்கு அனுப்புக. 200809 .


முகாம்களில் உள்ள இலங்கையின் தமிழர்களை விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க இங்கிலாந்தின் பிரதிநிதிகள் வற்புறுத்தல்.

இலங்கையின் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் அங்கு தொடரும் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .அந்நாட்டின் போர் முடிவடைந்து மூன்று மாதங்களாகியும் இன்னும் தமிழ் மக்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்படவில்லை. இதனைக்குறித்து கவலை வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் கத்தோலிக்க தொண்டு அமைப்பகம் காபோட் முகாம்களில் உள்ள தமிழ்மக்கள் விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளனர். 3 இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். காரித்தாஸ் தொண்டு நிறுவனமும் காபோடும் இணைந்து ஒவ்வொரு நாளும் 73,700 பேருக்கு ஒருவேளை உணவும் தண்ணீரும் கொடுத்து உதவுகிறார்கள். மழைகாரணமாக அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. முகாம் பகுதிகளிலெல்லாம் சகதிக் கடலாக மாறியுள்ளதாக யூகன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.