மாண்டே நெக்ரோ நாட்டில் புனித டிரீபோனுக்கு சிறப்பான விழா.200809 .
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தெற்கு ஐரோப்பாவில் உள்ள மாண்டே நெக்ரோ நாட்டில்
புனித டிரீபோனின் புனிதப்பொருள் அந்நாட்டுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் நைசீயாவிலிருந்து
மாண்டே நெக்ரோவுக்குக் கொண்டுவரப்பட்டதை ஒட்டி சிறப்பாக விழா எடுக்கப்படவுள்ளார். இந்நாட்டில்
பலசமய மக்களும் சுதந்திரமாக ஒன்றுபட்டு வாழ்கிறார்கள் . வத்திக்கான் திருப்பீடத்தின்
பிரதிநிதியாக கர்தினால் பிராங்க் ரோட் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார். கர்தினால்
பிராங்க்ரோட் வத்திக்கான் திருப்பீடத்தின் துறவு வாழ்வு மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வியல்
என்னும் திருத்தூது வாழ்வு மன்றங்களின் தலைவராவார். அந்நாட்டின் கோட்டோர் வளைகுடாவில்
புனித டிரீபோனின் விழா 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது . புனித டிரீபோனின்
விழா வழக்கமாக பிப்ரவரி முதல் தேதி கொண்டாடப்படுகிறது. புனித டிரீபோன்
கி .பி
251 ல் நைசீயாவில் கிறிஸ்தவர் என்பதற்காக சித்திரவதை செய்யப்பட்டு வேதசாட்சி மரணமடைந்தார்.