குருக்கள் ஆண்டை நிறைவு செய்யும்போது குருமாணவர்கள் பயிற்சி பற்றி வழிகாட்ட வத்திக்கான்
திருப்பீடம் ஆவணங்களைத் தயாரித்து வருகிறது .
வத்திக்கான் திருப்பீடத்தின் கத்தோலிக்கக்
கல்வி மன்றத்தின் செயலர் பேராயர் ஜான் லூயி புருகுவே இது பற்றி வத்திக்கான் செய்தி ஏடு
லொஸ்ஸர்வாத்தோரே ரொமானோவுக்கு இப்புதனன்று தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்ட ஆவணம்
குருமாணவர்கள் பயிற்சியோடு தொடர்புடைய மற்ற வத்திக்கான் மன்ற உறுப்பினர்களோடு கலந்தாய்வு
செய்து தயாராவதாகச் சொல்லியுள்ளார். குருக்களின் அழைப்பு மகிமை மிக்க அழைப்பு என்றும்
அத்தகைய அழைப்பைப் பெற்ற குருக்கள் மகிழ்ச்சிப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
.