இந்நாள் நற்செய்தி ஆகஸ்ட் 17 மத்தேயு நற்செய்தி 19,16–22 . 170809.
16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, ' போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு
நான் என்ன நன்மை செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்.17 இயேசு அவரிடம், ' நன்மையைப்பற்றி
என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்
' என்றார்.18 அவர், ' எவற்றை? ' என்று கேட்டார். இயேசு, ' கொலை செய்யாதே;
விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;19 தாய் தந்தையை
மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு
கூர்வாயாக ' என்று கூறினார்.20 அந்த இளைஞர் அவரிடம், ' இவை அனைத்தையும் நான்
கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன? ' என்று கேட்டார்.21
அதற்கு இயேசு, ' நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்
' என்றார்.22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார்.
ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.