கடவுளின் நன்மைத்தனம் எல்லா இடங்களிலும் பரவுயுள்ளது, பெங்களூர் பேராயர்
ஆக.15,2009 கைதிகள், சிறையிலும் கடவுளின் அன்பும் மன்னிப்பும் தங்களுக்கு இருக்கின்றது
என்று நினைத்தால் அவரின் நன்மைத்தனத்தை எல்லா இடங்களிலும் உணர முடியும் என்று பெங்களூர்
பேராயர் பெர்னார்டு மொராஸ் கூறினார்.
சூரியன் எல்லா இடங்களிலும் ஒளிர்வது போல
கடவுளின் நன்மைத்தனம் பாவிகள் மீதும் புனிதர் மீதும் சுடர்விடுகின்றது என்று மேலும் கூறினார்
பேராயர் மொராஸ்.
இரண்டு கைதிகளுக்கு புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் திருவருட்சாதனங்களை
நிறைவேற்றி உரையாற்றிய பெங்களூர் பேராயர், கைதிகள், தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும்
புதிய வாய்ப்புக்களையும் அனுபவிக்க வேண்டுமென்ற தனது ஆவலையும் தெரிவித்தார்.
திருச்சபையின்
சிறைப்பணி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கணனி மையத்தையும் தொடங்கி வைத்துப் பேசிய பேராயர்
மொராஸ், கைதிகளுடன் நான்கு மணி நேரம் செலவழித்து அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கையையும்
ஏற்படுத்தியுள்ளார்