இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோகிறது , ஆய்வு தெரிவிக்கிறது.140809.
அமெரிக்காவின் மதச் சுதந்திரக் கண்காணிப்புக் கழகம் இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோகிறது
, அது காக்கப்படவேண்டும் என அறிவித்துள்ளது . 2008 ஆம் ஆண்டில் சிறுபான்மை மதத்தவர்
முக்கியமாக கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது இந்திய அரசு அதைத் தவிர்க்க ஆவன செய்யத் தவறிவிட்டதாகவும்
இந்தியாவில் மதச் சுதந்திரத்துக்குத் தடை வந்துள்ளதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12
தேதியில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது . 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர் கடுமையாக
குஜராத்தில் தாக்கப்பட்டனர் . 1000 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர் . ஆப்கானிஸ்தான் ,
சோமாலியா , கியூபாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மதச் சுதந்திரம் பறிபோவதாக அமெரிக்காவின்
அகில உலக மதச் சுதந்திரக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமாவின்
அரசு இந்திய அரசிடம் மதச் சுதந்திரத்தைக் காக்குமாறு அறிவுறுத்த மதச் சுதந்திரக் கண்காணிப்புக்கழகம்
அவரிடம் பரிந்துரை செய்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்தக் கழகம் இப்படிப்பட்ட
ஆய்வறிக்கையை வெளியிடுகிறது .