2009-08-06 14:48:46

உலகில் அனைத்து அணுஆயுதங்களும் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கு ஹிரோஷிமா மேயர் அழைப்பு


ஆக.06, 2009 மனித வரலாற்றில் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 64 ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில் 2020ம் ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைத்து அணுஆயுதங்களும் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கு ஹிரோஷிமா மேயர் ததாகோஷி அகிபா அழைப்புவிடுத்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு போட்டதில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வரை இறந்தனர் மற்றும் அந்நகர் முழுவதும் அழிந்தது.

அந்நாளை நினைவுகூரும் விதமாக அங்கு கூடியிருந்த ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேருக்கு உரையாற்றிய நகர மேயர், உலகிலுள்ள அனைத்து அணுஆயுதங்களும் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கு அழைப்புவிடுத்தார்.

இதில் ஜப்பான் பிரதமர் தாரோ ஆசோ உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்







All the contents on this site are copyrighted ©.