ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருச்சபை நிறுவனங்களில் இடம் பெறும் திருட்டுக்களை நிறுத்துவதற்கு
ஆயர்கள் ஆளுனரின் உதவியைக் கோரியுள்ளனர்
ஆக.05,2009 திருச்சபை நிறுவனங்களில் இடம் பெறும் திருட்டுக்களை நிறுத்துவதற்கு மாநில
ஆளுனரின் உதவியைக் கோரியுள்ளனர் ஜார்க்கண்ட் மாநில கத்தோலிக்க ஆயர்கள்.
ராஞ்சிப்
பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போவின் தலைமையில் சென்ற குழு ஆளுனர் கடீக்கல் சங்கரநாராயணனைச்
சந்தித்து தங்கள் மனுவை சமர்ப்பித்தனர்.
திருச்சபை நிறுவனச் சொத்துக்களைத் திருடுவது
அதிகரித்து வருவதாக முறையிட்ட கர்தினால் டோப்போ, திருச்சபை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாத
நிலையில் இருக்கின்றது என்று கூறினார்.
கடந்த ஜூலை 9ம் தேதி கும்லா மற்றும் சிம்டேகா
மறைமாவட்டங்களில் இடம் பெற்ற திருட்டுகளி்ல கும்லாவில் மட்டும் ஏறத்தாழ 8 இலட்சம் ரூபாய்
வரை திருட்ப்பட்டுள்ளது.