நிதி நெருக்கடியால் இவ்வாண்டில் இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்காது, உலக உணவு
திட்ட நிறுவனம்
ஜூலை31,2009. உலக உணவு திட்ட நிறுவனத்தின் இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எதிர்பாராத
விதமாக 300 கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்காது
என்று அந்நிறுவனத் தலைவர் ஜோஜெட் ஷீரன் கூறினார்.
இவ்வாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ககப்பட்ட
உணவுக்கான உதவி நிதியை வைத்து 74 நாடுகளில் 10 கோடியே 80 இலட்சம் பேருக்கு உணவு வழங்கத்
திட்டமிட்டிருந்த வேளை, இவ்வாண்டிற்குத் தேவைப்பட்ட 670 கோடி டாலரில் 370 கோடி டாலரே
கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக ஷீரன் மேலும் கூறினார்.
எடுத்துக்காட்டாக,
பங்களாதேஷில் 50 இலட்சம் பேருக்கு உணவு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் 14 இலட்சம்
பேருக்கே இதனைச் செய்ய முடியும் என்றார் அவர்.
தற்போதைய நிதி நெருக்கடியால் பல
வளரும் நாடுகளில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது
என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கணித்துல்ளதையும் ஷீரன் சுட்டிக்காட்டினார்.