2009-07-30 20:00:29

டூரின் நகரில் செல்ல உள்ளார் திருத்தந்தை . 300709 .


டூரின் நகரில் கிறிஸ்துவின் முகம் கொண்ட புனிதத் துணியைக் காணத் திருத்தந்தை செல்ல உள்ளார் . 2010 ஆம் ஆண்டு டூரின் நகரின் புனிதத் துண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது . இன்னும் அதற்கான நாள் குறிக்கப்படவில்லை . திருத்தந்தையை அந்நிகழ்வின்போது வருகை தருமாறு டூரின் நகரின் கர்தினால் பேராயர் போலெட்டோ கேட்டுக்கொண்டதன் பேரில் திருத்தந்தை அங்கு செல்வார் என வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி வத்திக்கான் வானொலிக்குத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டூரின் நகரில் உள்ள புனிதத் துணியைச் சோதித்த நிபுணர் குழுவினர் அதில் அராமெயிக் மொழியில் யூதர்களின் அரசர் என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளதாகவும் , 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனவும் , இது இயேசுவைக் கல்லறையில் மூடிய துணியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.