2009-07-29 19:05:44

கிறிஸ்தவர்களுக்கு உதவிப்பணம் வழங்குவதற்கு நீதி மன்றம் தடை.290709.


திருத்தலப் பயணம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு உதவிப்பணம் வழங்க ஆந்திர அரசு சென்ற ஆண்டு சட்டத்தில் இடமளித்திருந்தது . அதை ஆந்திர உயர் நீதி மன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது .

எருசலேம் பெத்லகேம் செல்ல ஆந்திர அரசு ஹஜ் யாத்திரி செல்பவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதைப் போல கிறிஸ்தவர்களுக்கும் உதவிப்பணம் வழங்க சிறுபான்மையினர் அமைப்பு சட்டத்தில் இடமளித்திருந்தது .

அதை உயர் நீதிமன்றம் வரிப்பணத்திலிருந்து திருப்பயணம் செல்வோருக்கு உதவித் தொகை வழங்கக் கூடாது என தற்காலிகமாகத் தடை உத்தரவு போட்டிருக்கிறது . மாநில முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி திருயாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தார் . சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 51 கிறிஸ்தவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற்றிருந்தனர் .








All the contents on this site are copyrighted ©.