2009-07-29 19:07:52

அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின மையக்கருத்து. 290709 .


அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தை வழங்கியுள்ளார் .

அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும் . இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும் உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்துகிறார் . சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார் . இந்த சவால்களை நீதியின் அடிப்படையில் , சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.