2009-07-25 14:34:19

ஜிம்பாபுவேயில் தேசிய ஒப்புரவுக்காக மூன்று நாள் செபம்


ஜூலை25,2009. ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவதற்குக் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட முயற்சிக்கு ஆதரவு வழஙகும் நோக்கத்தில் அந்நாட்டினர் மூன்று நாள் செபத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜிம்பாபுவே அமைச்சர் ஜான் நிகோமோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஆலயங்களுக்கோ அல்லது பிற வழிபாட்டுத் தலங்களுக்கோ சென்று செபிக்கவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிஅமைக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மூன்று நாள்களுக்குப் பின்னர் தேசிய அளவில் உரையாடலைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் நிகோமோ தெரிவித்தார்.

இந்த முயற்சியானது ஜிம்பாபுவே அரசுத்தலைவர் இராபர்ட் முகாபே, பிரதமர் மோர்கன் திஸ்வான்ஜிராய் உள்ளிட்ட சில அரசுத் தலைவர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.