2009-07-24 17:00:52

பிலிப்பைன்ஸ் நாட்டின் முந்நாள் தலைவருக்கு திருத்தந்தையின் கடிதம்.240709.


பிலிப்பைன்ஸ் நாட்டின் முந்நாள் தலைவருக்கு திருத்தந்தையின் ஆறுதல் கடிதம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முந்நாள் தலைவர் திருமதி கொராசன் அக்வீனோ பெருங்குடல் புற்று நோயால் அவதியுறுகிறார் . அவர் தற்போது மணிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . பிலிப்பைன்ஸ் நாட்டின் வத்திக்கான் தூதரகம் வழியாக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் நலம் விசாரித்து அவரது இறை மன்றாட்டுக்களைக் காணிக்கையாக்கி விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார் . திருத்தந்தையின் செபங்கள் தமக்கு ஆறுதலாக இருப்பதாக திருமதி அக்வீனோ தெரிவித்துள்ளார் . 76 வயதாகும் திருமதி அக்வீனோ 1986 ஆம் ஆண்டிலிருந்து 92 வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தார்.








All the contents on this site are copyrighted ©.