திருத்தூதர் பவுலின் பிறந்த இடத்தில் கிறிஸ்தவ வழிபாடு. 240709 .
திருத்தூதர் பவுலின் பிறந்த இடத்தில் கிறிஸ்தவ வழிபாடு நடத்த துருக்கியின் அரசு அனுமதி
அளித்துள்ளது .
திருத்தூதர் பவுல் தார்சு நகரில் பிறந்தவர் . துருக்கி நாட்டின்
ஆயர்குழுவின் தலைவர் மேதகு ஆயர் லூயிஜி பதோவேஸ் தார்சு நகரில் திருத்தூதர் பவுலின் பிறந்த
இடம் இனி சுற்றுலாத் தலமாக இருப்பதற்குப் பதிலாக வழிபாட்டுத்தலமாக அமையும் என மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார் . தார்சு நகரின் உள்ளூர் மாநகராட்சிப் பொறுப்பாளர்கள் அங்கு வழிபாடு
நடத்த அனுமதி தரவேண்டும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார் . சென்ற ஆண்டு திருத்தூதர் பவுலின்
ஜூபிலி கொண்டாடப்பட்டபோது அங்கு வழிபாடு நடத்த துருக்கி அரசு அனுமதி வழங்கியிருந்தது
எனவும் பேராயர் தெரிவித்துள்ளார் . தார்சு நகரை கிறிஸ்தவத் திருத்தலமாக அறிவிக்க அரசு
தயாராக இருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார் . துருக்கியில் 32 , 000 கத்தோலிக்கர்
வாழ்வதாகத் தெரிகிறது .