2009-07-24 17:11:14

திருத்தூதர் பவுலின் பிறந்த இடத்தில் கிறிஸ்தவ வழிபாடு. 240709 .


திருத்தூதர் பவுலின் பிறந்த இடத்தில் கிறிஸ்தவ வழிபாடு நடத்த துருக்கியின் அரசு அனுமதி அளித்துள்ளது .

திருத்தூதர் பவுல் தார்சு நகரில் பிறந்தவர் . துருக்கி நாட்டின் ஆயர்குழுவின் தலைவர் மேதகு ஆயர் லூயிஜி பதோவேஸ் தார்சு நகரில் திருத்தூதர் பவுலின் பிறந்த இடம் இனி சுற்றுலாத் தலமாக இருப்பதற்குப் பதிலாக வழிபாட்டுத்தலமாக அமையும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . தார்சு நகரின் உள்ளூர் மாநகராட்சிப் பொறுப்பாளர்கள் அங்கு வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார் . சென்ற ஆண்டு திருத்தூதர் பவுலின் ஜூபிலி கொண்டாடப்பட்டபோது அங்கு வழிபாடு நடத்த துருக்கி அரசு அனுமதி வழங்கியிருந்தது எனவும் பேராயர் தெரிவித்துள்ளார் . தார்சு நகரை கிறிஸ்தவத் திருத்தலமாக அறிவிக்க அரசு தயாராக இருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார் . துருக்கியில் 32 , 000 கத்தோலிக்கர் வாழ்வதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.