இஸ்பானியாவின் கருச்சிதைவுச் சட்டத்திற்கு கர்தினால் எதிர்ப்பு .2307
கர்தினால் கனிசாராஸ் வத்திக்கான் திருப்பீடத்தின் வழிபாடு மற்றும் அருட்சாதன மன்றத்தின்
தலைவர் . பாதுகாப்பு இல்லாதவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய சட்டங்கள் வலுக்குறைந்தவர்களையும்
பாதுகாப்பு இல்லாதவர்களையும் அப்பாவி மக்களையும் நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகத்
தெரிவித்தார் கர்தினால் . இஸ்பானியாவின் மன்னர் ஜூவான் கார்லோஸ் பல்கலைக் கழகத்தில்
உரை நிகழ்த்தியபோது அவர் இதைத் தெரிவித்தார் . மருந்து நோய் நீக்கப் பயன்படுத்தப்பட
வேண்டுமே தவிர உயிரைப்பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது தவறு என்றும் சட்டங்கள் மனித
உயிரைக் காப்பதற்குப் பதிலாக கொல்வதற்குப் பயன்படுவதாகத் தெரிவித்தார் கர்தினால் கனிசாராஸ்
. கருச்சிதைவால் உயிர்கள் பலியாவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டுக்கு 4 கோடியே 70 இலட்சம்
கருக்கள் சட்டத்தின் துணையோடு அழிக்கப்படுவதாக உலக நல ஆணையகம் தெரிவித்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார் . அவ்வாறு கருச்சிதைவு செய்து கொள்பவர்கள் கத்தோலிக்கச் சபையிலிருந்து உடனடியாக
நீக்கப்பட்டவர்கள் என்ற கர்தினால் கருச்சிதைவு பெருங்குற்றம் என்றும் அதைவிடக் கொடுமையான
பாவம் என்ன உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார் .