தாலந்து என்ற வார்த்தை இந்தக் கதையிலிருந்து உருவானதே . தாலந்து என்பதற்கு இந்தியப்பணம்
50,000 ரூபாய் என்று பொருள் . ஆனால் அதற்கு வேறொரு முக்கியமான அர்த்தம் திறமை என்பதாகும்
. சில தனிப்பட்ட கோட்பாடுகள் மனிதர்கள் எல்லோரும் சமம் என்றோ சமமாக கருதப்படவேண்டும்
என்னும் கொள்கையோ தவறு எனச் சான்றோர் கூறுவர் . பிறப்பில் ஒன்றாகப் பிறக்கும் குழந்தைகள்
சிறப்பு அடிப்படையில் செய்தொழில் அடிப்படையில் ஒன்றாகமாட்டா என்று வள்ளுவப்பெருமகனார்
கூறுவர் . இயேசுவும் மனிதர்கள் திறமைகள் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதை அறிந்து
அதையே கற்பித்து வந்தார் . திருத்தூதர் பவுல் அடிகளாரும் வரங்கள் பல விதம் என விரிவாக
விளக்கிக்கூறுவார் . வாழ்க்கையில் நாமும் இதைக் கண்கூடாகக் காண்கிறோம் . தூய பேதுரு பசிலிக்காவுக்கு
கட்டடக் கலைஞர் மைக்கிள் ஆஞ்சலோ வரை படம் வரைந்தார் . அதற்குப்பின்னர் பல கலைஞர்கள் அதற்கு
செயல்திட்டமும் மெருகும் சேர்த்தனர் . பல திருத்தந்தையர்கள் , பல கலைஞர்கள் தூய பேதுரு
பசிலிக்காவை 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டினார்கள் . ஆனால் அதை நிர்மாணித்தவர்கள்
அனைவருமே வெவ்வேறு விதத்தில் திறமைசாலிகள் . அங்கிருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும்
கட்டடத்திறனும் பல்வேறு கலைஞர்களின் திறனைக் காலமெல்லாம் ரசிக்குமாறு காட்டி நிற்கின்றன
. அதைக் கட்டியவர்கள் எல்லோரும் திறமைசாலிகளே .
நாம் அனைவருமே எத்தகு
திறமையைக் கொண்டிருந்தாலும் கடவுளுடைய பணியாளர்களே . நாம் அனைவருமே ஒப்பந்தப் பணியாளர்கள்
. மிகவும் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களை நினைத்து நாம் பொறாமைப்படத் தேவையில்லை.
பதவி உயர உயர பொறுப்புக்களும் அதிகமாகின்றன . ஒரே கடவுளை வணங்கத் தெரிந்து கொண்ட யூதர்கள்
கடவுளுக்குப் பணிந்து அவர்காட்டிய வழியில் வாழ மிகவும் கடமைப்பட்டவர்கள் . இந்தக் கதை
அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்றாலும் நாமும் இதனால் பயனடைய வேண்டும் .
தூய
பேதுரு பசிலிக்காவுக்கு வரைபடம் வரைந்த மைக்கிள் ஆஞ்சலோ மட்டும்தான் முக்கியமானவர் எனக்கூறுவது
தவறு . அங்கு கல்லையும் மண்ணையும் சுமந்தவரும் முக்கியமானவரே. எல்லோரும் கடவுளின் பணியாளர்கள்
. அவ்வாறு நாம் சமம் எனக்கூறுவது தனிப்பட்ட கோட்பாடு காரணமாக அல்ல . வாய்ப்புக்களும்
பலருக்கும் பலவிதமாகத் தரப்படுகின்றன .
கடவுள் நம்மை மறந்தது போலத் தெரியலாம்
. ஆனால் அவர் யாரையும் மறப்பதில்லை . நம்முடைய திறமைகளை வெளிக்காட்ட அவர் வாய்ப்பளிக்கிறார்
. நாம் நமது வாழ்க்கை என்ற வயலில் பல்வேறு வகையான பயிர்களை வளர்ப்பதற்கு வாய்ப்புத் தரப்படுகின்றோம்
. நாம் இதனைச் செய்து முடிக்கக் கால அவகாசமும் தரப்படுகின்றோம் .
ஆனால் முடிவில்
ஒருநாள் நாம் ஆண்டவருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் . நமக்கு வாழ்வும் வளமும் அளித்த
ஆண்டவர் நம்மிடம் கணக்குக் கேட்பது முறையே . இங்கு பணத்தைவிட மிக முக்கியமானது இருக்கிறது
. பணத்தை வீணாக்குவதைவிட வேறு முக்கியமானவை இருக்கின்றன . நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்
நேரத்தில் நாம் செபிக்கின்றோமா. பிறரோடு நட்போடு பழகுகின்றோமா . உறவுகளை வளர்க்கின்றோமா
. நீதீயோடு நடக்கின்றோமா நீதிக்காக போராடுகின்றோமா . கடவுள் நம்மிடம் நல்ல மதிப்பீடுகளின்
வளர்ச்சியை எதிர்பார்க்கிறார் . தாலந்து அல்லது திறமைகள் என்பது பொருட்காட்சிசாலைப் பண்டங்கள்
அல்ல . அல்லது தற்பெருமையோடு தருக்கித் திரிவதற்காகத் தரப்பட்டவையும் அல்ல . நிலத்தையும்
பருவத்தையும் போன்றது நம்முடைய சூழ்நிலைகள் . நாம் விதைப்பதைப் போன்று திறமைகளைப் பயன்படுத்தவேண்டும்
. வெந்ததைத் தின்று வெறுமனே வாழ்ந்து விதி வரும்போது சாவோம் என்றிருப்பது அறிவுடைமையன்று
.புதுப்புது விளைச்சலுக்கு வித்திடவேண்டும். ஜூலைத்திங்கள் 21 ஆம் நாள் 1969 லேயே மனிதன்
நிலவில் கால்பதித்து வந்துள்ளான் . அதன்பிறகு பலமுறை நிலவில் தடம் பதித்து வந்துள்ளான்
. கடல்கடந்து அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார் . காட்டை நாடாக்கி நகராக்கிய பெருமை
மனிதரைச் சாருமல்லவா .
எனவே சமத்துவம் உள்ளது . திறமைகளில் அல்ல . வாய்ப்புக்களில்
சமத்துவம் உள்ளது . ஒவ்வொருவர் திறமைக்கும் ஏற்றவாறு பொறுப்புக்களிலும் சமத்துவம் உண்டு
. கடவுள் காட்டும் அன்பிலும் எல்லோரும் சமமே . ஐந்து தாலந்தைப் பெற்றவரும் இரண்டு தாலந்தைப்
பெற்றவரும் பாராட்டப்பெற்றார்கள் . எல்லோருக்கும் இறைவனின் அரசில் இடமுண்டு . ஆனால் எல்லோருமே
கடவுளின் அரசில் பணியாளர்களே . எல்லோரிடமும் பொறுப்பும் தரப்பட்டுள்ளது .
கதையில்
வரும ஒரு தாலந்தைப் பெற்றவர்தான் கதையின் கதாநாயகர் என்பதைச் சொல்லத் தேவையில்லை . வாழ்க்கையில்
ஒரு தாலந்தையும் இரண்டு தாலந்தையும் பெற்றவர்களைத்தான் அதிகம் காண்கிறோம் . கம்பரும்
வள்ளுவரும் சேக்ஸ்பியரும் தாமஸ் ஆல்வா எடிசனும் மார்க்கோனியும் குறைந்த எண்ணிக்கையிலேயே
காணப்படுகிறார்கள் .
ஒரு தாலந்தைப் பெற்றவருக்கு சோதனைகள் அதிகம் .
எனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு திறமையைக் கொண்டு நான் எதைச் சாதிக்கமுடியும் என எண்ணலாம்
. எனக்கு ஒரு தாலந்துதானே இருக்கிறது என்றெண்ணி வருத்தமும் படலாம். மற்றவர்களுடைய திறமைகளைப்
பார்த்து பொறாமையும் படலாம் . கதையில் தலைவரையே அவன் கோபமாகக் கடிந்து கொள்கிறான் . ஐயா
நீர் கடின உள்ளத்தினர் எனக் கூறுகிறான். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்
. கடவுளையும் மனிதர்களையும் கடிந்து கொள்பவர்கள் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தாத மனித
முயற்சியில்லாதவர்கள் .
ஒரு தாலந்தைப் பெற்றவனின் தோல்விக்குக் காரணம்
அவனது பயம் . உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்
எனக்கூறுவதைக் கேட்கிறோம் . சவால்களைச் சந்திக்க அஞ்சினான் . அவனுடைய தலைவர் சரியாக சோம்பேறியே
, பொல்லாத பணியாளனே எனப் பொறுத்தமாகக் கூறுகிறார் . சவால்களைச் சந்தித்துத் தோல்வியுற்றால்
பரவாயில்லை. எதையுமே சந்திக்காமல் வெறுமனே இருந்து வாழ்வை இழப்பது மனித மாண்பல்ல . ஹிட்லரின்
கொடுங்கோல் ஆட்சிகாலத்தில் பலர் தீமைகளைக் கண்டும் அவனைக் கண்டிக்கத் தவறினார்கள் . அவனது
செயல்படாத்தன்மையால் அவன் பெரும் குற்றவாளியாகின்றான் . தீமைக்குத் துணை போகின்றான் .
அவனைப்போல செயல்படாதிருப்பதாலேயே உலகில் இன்று தீமைகள் மலிந்து கிடக்கின்றன .40 ஆண்டுகளுக்கு
முன்னர் இந்நாளில் ஆம்ஸ்ட்ராங்க் , ஆல்டிரின் , காலின்ஸ் ஆகிய அமெரிக்க விண்வெளிவீரர்கள்
நிலவில் கால் பதித்தனர் . அவர்கள் அங்கு செல்ல எத்தனை ஆயிரம் பேர் பணி செய்து உதவினர்கள்
என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் . இசைக் கருவியில் ஒரு முக்கியமான சுரம் அந்த ஒரு
தாலந்துக்காரன் . அவன் செயல்படாதபோது இசை மழை பொழிவதெப்படி . அவன் முயற்சி செய்திருக்கலாம்
, கடவுள் அருளுக்கு மன்றாடியிருக்கலாம் , பிறரோடு கலந்து ஆலோசித்திருக்கலாம் . உடலின்
உறுப்புக்கள் ஒவ்வொன்றும் முக்கியமாவது போல இறையாட்சியில் நாம் அனைவருமே முக்கியமானவர்கள்
.