கிறிஸ்தவர்கள் நம்பிக்கை மற்றும் அர்ப்பணத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார்கள்,
இயேசு சபை அதிபர்
ஜூலை18,2009. எதுவும் மேலோட்டமாகப் பார்க்கப்படுகின்ற இன்றைய உலகில், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை
மற்றும் அர்ப்பணத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்று இயேசு சபை அதிபர்
அடால்ப் நிக்கோலாஸ் கூறினார்.
பிலிப்பைன்சில் இயேசு சபை மீண்டும் தனது மறைப் பணியை
ஆரம்பித்த 150ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி மனிலா இயேசுசபை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
திருப்பலியில் இவ்வாறு கூறினார் இயேசு சபை அதிபர் நிக்கோலாஸ்.
16ம் நூற்றாண்டில்
ஸ்பானிய இயேசு சபை மறைபோதகர்கள் முதன் முதலாக பிலிப்பைன்சில் அந்நாட்டின் முதல் பள்ளியைத்
தொடங்கி மறைப்பணியாற்றி வந்தனர். பின்னர் 1768ம் ஆண்டில் ஸ்பெயின் அச்சபையை தடை செய்ததோடு
அச்சபையினரை அதன் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வெளியேற்றினர். 1859ம் ஆண்டில் மனிலா
பல்கலைகழகத்தை இயேசு சபையினர் ஆரம்பிக்கும் வரை அவர்கள் பிலிப்பைன்சுக்குச் செல்லவில்லை.