வெள்ளி் காலை திருத்தந்தை குளியலறையில் தவறி விழுந்ததால் மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார்
. வலது கையின் மணிக்கட்டில் அடிபட்டுள்ளதால் மருத்துவ மனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு
சிகிச்சை அளிக்கப்படுகிறது . வெள்ளி காலை இந்த நிகழ்வுக்குப் பிறகு திருத்தந்தை காலைத்
திருப்பலியை நிகழ்த்திவிட்டு காலை உணவையும் உண்டிருக்கிறார் . கடந்த திங்களிலிருந்து
திருத்தந்தை இத்தாலியின் ஆவோஸ்டா பகுதியில் லெஸ்கோம்பேயின் சாலட் நகரில் விடுமுறையைச்
செலவிடுகிறார் . திருத்தந்தை பற்றிக் கூறிய வத்திக்கானின் செய்தித் தொடர்பாளர் தந்தை
பெடரிக்கோ லொம்பார்டி திருத்தந்தையின் கையில் ஏற்பட்டுள்ள அடி இலேசானதுதான் எனத் தெரிவித்துள்ளார்
.