ஈரான் விபத்தில் மாண்டவர் குடும்பத்துக்கு திருத்தந்தை அனுதாபம்.170709 .
ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளார் .
இந்த விமான விபத்து ஈரானின் ஜன்னத்தாபாத்தில்
நிகழ்ந்தது . டெஹ்ரானில் இருந்து கிளம்பிய 16 நிமிடங்களில் விமானத்தின் ஒரு எந்திரம்
தீப்பிடித்ததால் அவசரமாகத் தரை இறங்க முயன்ற விமானம் நொறுங்கி விழுந்து எரிந்தது .இதில்
பயணம் மேற்கொண்ட 168 பேர் மாண்டனர் . இந்த துயரமான நிகழ்வுக்குத் தம் அனுதாபச் செய்தியை
அனுப்பிய திருத்தந்தை இறந்தோரின் ஆன்ம சாநதிக்காக மன்றாடுவதாகவும் , இறந்தோரின் இழப்பால்
துயருறும் உறவினருக்கு கருணைமிக்க தேவனின் ஆறுதலையும் , இத்துயர வேளையில் வேதனையைத்
தாங்கும் சக்தியையும் தருமாறு தாம் பிரார்த்திப்பதாகவும் செய்தி அனுப்பியுள்ளார் .
திருத்தந்தையின்
அனுதாபச் செய்தியில் வத்திக்கான் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே கையொப்பமிட்டு
ஈரான் நாட்டுக்கான அப்போஸ்தலிக்கத் தூதர் மேதகு ஜான் பால் கோபலுக்கு அனுப்பியுள்ளார்
. அதில் திருத்தந்தை ஈரானின் தலைவர்களுக்கும் துயருறும் மக்களுக்கும் தம் ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துள்ளார் .