திருத்தந்தையின் விடுமுறை நாட்களை இயற்கையின் எழிலும் , இன்னிசையும் , கற்பதும் எனப்
பயனுள்ள முறையில் செலவிடப்படுவதாக அவர் தங்கியிருக்கும் வட இத்தாலியின் அவோஸ்டாப் பகுதியின்
ஆயர் ஜோசப்பே அன்போன்சி தெரிவித்துள்ளார் . திருத்தந்தை சலேசிய சபையினரின் இல்லத்தில்
லேஸ் கோம்பசில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் . அவர் ஓய்வெடுப்பதைப் பெரிதும் மதிப்பதாகவும்
, அவருக்குத் தேவைப்படும்போது அவருக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் திருத்தந்தை அங்கிருப்பது
அப்பகுதியில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆயர் அன்போன்சி தெரிவித்துள்ளார்
. எழில் கொஞ்சும் இயற்கையின் அழகோடு , நல்ல நூலகமும் அவர் தங்கியிருக்கும் இல்லத்தில்
இருக்கிறது . திருத்தந்தை சென்ற திங்கள் அங்குச் சென்றபோது சலேசியச் சபைத் தலைவர் தந்தை
பாஸ்குவால் சாவஸ் அவரை அங்கு வரவேற்றார் . அங்கு தங்கியிருக்கும் வேளை வரும் ஞாயிறு மூவேளை
செப வழிபாட்டை நடத்துவதோடு அங்குள்ள குருக்களையும் துறவியரையும் இறை மக்களையும் திருத்தந்தை
சந்தி்ப்பார் என ஆயர் ஜோசப்பே அன்போன்சி மேலும் தெரிவித்துள்ளார் .