2009-07-15 15:19:27

பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ள மருந்துகள் உலகின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை


ஜூலை15,2009 பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் உலகின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று மிஸ்னா என்ற மறைபோதக செய்தி நிறுவனம் அறிவித்தது.

பன்றிக்காய்ச்சலால் குறைவாகப் பாதிக்கப்பட்டுள்ள பணக்கார நாடுகளே இந்தத் தடுப்பு மருந்துகளை அதிகம் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுள்ளன என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியிருப்பதையும் அம்மறைபோதக செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியது.

இலண்டனை மையமாகக் கொண்ட கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் என்ற பன்னாட்டு நிறுவனம், அர்ஜெண்டினா நாட்டு சன்டியாகுவில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை 1400 சிறாருக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்திருப்பதற்கு அர்ஜெண்டினாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏறத்தாழ இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் டாலர் அபராதம் விதித்திருப்பதையும் மிஸ்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

 








All the contents on this site are copyrighted ©.