2009-07-14 14:55:48

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உண்மையில் பிறரன்பு திருமடல் அநீதிக்கு எதிரான குரல்


ஜூலை14,2009 அநீதிகளைக் களைவதற்கான பொறுப்பு மற்றும் சுதந்திரம் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்டின் அண்மை திருமடல் வலியுறுத்துவது குறித்து எய்ட் டு த சர்ச் ன் நீட் என்ற பிறரன்பு அமைப்பின் தலைவர் அருள்திரு ஜோவாக்கின் அலியந்தே தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

140க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் ஏழைகளின் சார்பில் இத்திருமடலுக்காகத் திருத்தந்தைக்கு நன்றியுரைப்பதாகக் கூறிய அவர், அநீதிக்கு எதிரான குரலாக இத்திருமடல் உள்ளது என்றார்.

திருத்தந்தையின் செய்தி ஒவ்வொருவரையும் அவர்களின் சுதந்திரம் குறித்து அறிந்தவர்களாய்ச செயல்பட அழைப்புவிடுக்கிறது என்றும் அருள்திரு அலியந்தே கூறினார்.

நீதி மற்றும் உண்மையிலிருந்து பிறக்கும் அமைதி மூலமே வருங்காலத்தை வடிவமைக்க முடியும் என்பதையும் அச்சுற்றுமடல் வலியுறுத்திக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.