நாம் இன்று புனித பொனவெந்தூரின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
இவர் ஓர் ஆயர் மற்றும்
மறை வல்லுநர் . வாழ்ந்த காலம் 1221 – 1274 .
4 வயதில் இவரைத் துன்புறுத்திய கொடிய
நோய் புனித அசிசி பிரான்சிஸிடம் மன்றாடியதால் புதுமையாக நீங்கி நலம் பெற்றார் . 17 வயதில்
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார் . 16 ஆண்டுகள் சபைத்தலைவராக இருந்தார் . திருச்சபையின்
2 வது லயன்ஸ் பொதுச் சங்கத்தில் கலந்து கொண்டார் . அன்று பிரிந்திருந்த மேற்கத்திய மற்றும்
கிழக்கத்திய திருச்சபைகளை ஒன்று சேர்த்த பெருமை இவரையே சேரும் . புனித அக்குவினாஸ் தோமையாரும்
இவரும் ஒரே நாளில் மறை வல்லுநர் பட்டம் பெற்றனர் .