2009-07-09 15:41:37

ஜிம்பாபுவே விடுதலை அடைந்ததற்குப் பின்னர் தற்சமயம் கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர் நோக்கி வருகின்றது


ஜூலை09,2009 ஜிம்பாபுவே நாடு விடுதலை அடைந்ததற்குப் பின்னர் தற்சமயம் கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர் நோக்கி வருகின்றது என்று அந்நாட்டு கத்தோலிக்க அருள்தந்தை ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு காரணமாக தனது பெயரை அறிவிக்க விரும்பாத அக்குரு, பிரிட்டனின் காப்போடு பிறரன்பு நிறுவனத்திடம் பேசிய போது, தென் ஆப்ரிக்காவிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் பெரும்பாலான ஜிம்பாபுவே மக்களுக்கு இன்னும் உணவும் மருந்தும் தேவைப்படுகின்றன என்றார்.

ஜிம்பாபுவே காரித்தாஸ் நிறுவனம், பொதுநலம் மற்றும் சுகாதாரக் கல்வியை வழங்கி வருகின்ற போதிலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட காலரா நோய் பாதிப்பால் பல பொதுநல விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன என்றும் அக்குரு கூறினார்.

இவ்வாண்டு ஜனவரியில், 77 இலட்சம் டாலர் உதவிக்கு விண்ணப்பித்திருந்த காரித்தாஸ் நிறுவனம் அதில் மூன்றில் ஒரு பகுதியையே திரட்ட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.