2009-07-09 15:44:46

இலங்கையிலுள்ள ஏறத்தாழ மூன்று இலட்சம் அகதிகளுள் குறைந்தது 90,000 பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்


ஜூலை09,2009 இலங்கையிலுள்ள ஏறத்தாழ மூன்று இலட்சம் அகதிகளுள் குறைந்தது 90,000 பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்நாட்டு முக்கிய எதிர்க்கட்சியான தேசிய ஐக்கிய கட்சி அறிவித்ததாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

இலங்கையின் வடபகுதி மாகாணங்களில் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளை, அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சண்டையில் இறந்தவர்கள் மற்றும் அகதிகளானவர்கள் பற்றிய எண்ணிக்கையில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, விடுதலைப் புலி்களுடன் இலங்கை அரசு நடத்திய போரில் தப்பித்து அங்குமிங்கும் ஓடிய அப்பாவி பொது மக்களில் ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர் என்று போர் முடிவடைந்தவுடன் அறிவித்த மூன்று அரசு மருத்துவர்கள் தற்பொழுது அத்தகவல்களை மறுத்துள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் அறிவித்து.

இந்த தகவலை இலங்கை அரசின் அழுத்தத்தின் பேரில் அவர்கள் இவ்வாறு வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக வன்னியில் இருந்து வந்து கைதாகி தடுப்புக் காவலில் உள்ள அம்மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.