2009-07-09 15:42:43

1996ம் ஆண்டில் அல்ஜீரியாவி்ல் ப்ரெஞ்ச் கத்தோலிக்கத் துறவிகள் கொல்லப்பட்டது குறித்த உண்மைகளை வெளிக் கொணருவதற்கு பிரான்ஸ் உறுதி


ஜூலை09,2009 1996ம் ஆண்டில் அல்ஜீரியாவி்ல் ப்ரெஞ்ச் கத்தோலிக்கத் துறவிகள் கொல்லப்பட்டது குறித்த உண்மைகளை வெளிக் கொணருவதற்கு உறுதி அளித்துள்ளார் பிரான்ஸ் அரசுத் தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி.

டிராப்பிஸ்ட் துறவு சபையைச் சேர்ந்த ஏழு துறவிகள் இசுலாமிய கடத்தல்காரர்களால் அல்லாமல், அல்ஜீரிய இராணுவத்தால் தலை வெட்டப்பட்டு இறந்தார்கள் என்று அவர்கள் இறந்த சமயத்தில் செய்திகள் வெளியாகின.

எனினும் 1996ம் ஆண்டு மார்ச் 26க்கும் 27க்கும் இடைப்பட்ட இரவில் இத்துறவிகள் கடத்தப்பட்டனர். இவர்களின் தலைகள் அதே ஆண்டு மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்குமிடையேயான உறவுகள் பொய்மையின் மீது அல்ல, மாறாக உண்மையின் மீது உருவாக்கப்பட்டன என்று நிருபர்களிடம் உரைத்த சர்கோசி, அத்துறவிக்ள் இறந்த விதம் குறித்த உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.