பாகிஸ்தானில் அண்மையில் இசுலாமியரின் தாக்குதலுக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு அரசு இழப்பீட்டு
நிதி
ஜூலை08,2009. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் இசுலாமியரின் தாக்குதலுக்கு
உள்ளான கிறிஸ்தவர்களுக்குத் தலா 2,20,000 ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க உறுதி அளித்துள்ள
அம்மாநில அரசு, முதல் கட்ட காசோலைகளை கொடுத்துள்ளது.
காசோலைகள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில்
மூன்று கத்தோலிக்கக் குருக்களும் பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இசுலாமியர்
ஒருவருக்கும் கிறிஸ்தவர் ஒருவருக்கும் இடையே தனிப்பட்ட சண்டையாக ஆரம்பித்ததை தேவநிந்தனை
எனக் குற்றம் சாட்டி 50க்கும் மேற்பட்ட இசுலாமியர் பாஹ்மானி வாக் என்ற கிராமத்தைத் தாக்கி
கிறிஸ்தவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தினர்.
112 கிறிஸ்தவக் குடும்பங்களைக்
கொண்ட பாஹ்மானி வாக் கிராமத்தைத் தாக்கிய இசுலாமியர்கள் ஏறத்தாழ 100 வீடுகளில் புகுந்து
கொள்ளையடித்தனர்.