2009-07-05 19:38:03

இந்நாள் நற்செய்தி . மத்தேயு நற்செய்தி அதிகாரம் 9 , 18 -26 . ஜூலை 6 .


மத்தேயு நற்செய்தி அதிகாரம் 9 , 18 -26 .



18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, ' என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள் ' என்றார்.19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.21 ஏனெனில் அப்பெண், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன் ' எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ' மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று ' என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.24 அவர், ' விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.








All the contents on this site are copyrighted ©.