2009-07-03 15:48:48

வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர் இயேசுசபை அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோ இறைவனடி எய்தினார்


ஜூலை03,2009 வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர் இயேசுசபை அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோ இவ்வியாழன் மாலை இறைவனடி எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

1933ம் ஆண்டு இத்தாலியின் நேப்பிள்ஸில் பிறந்த அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோ 1948ல் இயேசு சபையில் சேர்ந்தார். 1963ல் குருவான இவர், 1970ல் பிரான்சின் பாரிசில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அதே ஆண்டில் வத்திக்கான் வானொலியில் பணியில் சேர்ந்த இவர், பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். 1985ம் ஆண்டு ஜூலை முதல் 2005ம் ஆண்டு வரை வத்திக்கான் வானொலியின் இயக்குனராகப் பணியாற்றினார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோ, ஜூலை 2, இவ்வியாழனன்று இறந்தார். இவரது அடக்கச் சடங்கு திருப்பலி இச்சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு, உரோம் இயேசு சபை தலைமை இல்லத்துக்கு அருகிலுள்ள சாந்தோ ஸ்பிரித்தோ ன் சாஸ்சியா ஆலயத்தில் நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.