யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ' நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய
சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? ' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன்
தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப்
பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். மேலும் எவரும் பழைய
ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்;
கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பையில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை.
ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும்.
புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா
' என்றார்.