2009-07-02 16:17:45

இலங்கை அகதிகள் முகாம்களில் ஆறு குருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்


ஜூலை02,2009 இலங்கை அகதிகள் முகாம்களில் ஆறு குருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆசிய செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ள சிபிசிஐ செய்தி அமைப்பு, நான்கு மறைமாவட்ட குருக்களும் இரண்டு அமலமரி தியாகிகள் சபை குருக்களும் இவ்வாறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

உள்நாட்டுப் போர் காலத்தின் போது தமிழ் மக்கலிடையே இறுதிவரை இருந்து பணிபுரிந்தவர்கள் இக்குருக்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாண ஆயர் இலங்கை பாதுகாப்புச் செயலரிடம் இக்குருக்களுக்கான விடுதலை குறித்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ள போதிலும் இதுவரை எப்பதிலும் இவ்வமைச்சகத்தால் வழங்கப்படவில்லை.








All the contents on this site are copyrighted ©.