மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு
ஜூலை01,2009 மியான்மாரில் ஜனநாயக ஆதரவு எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சு கி உட்பட அனைத்து
அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் இச்செவ்வாயன்று
அழைப்புவிடுத்தார்.
மியான்மார் அதிகாரிகளுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
நடத்துவதற்காக இவ்வெள்ளியன்று அந்நாடு செல்லத் திட்டமிட்டுள்ள மூன், நொபெல் அமைதி விருது
பெற்றுள்ள சு கி மீதான விசாரணைகள் தனக்குக் கவலை தருவதாக நிருபர்களிடம் கூறினார்