ஜூலை01,2009 கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கப்பட்டுள்ள சர்வதேச குருக்கள் ஆண்டை முன்னிட்டு
ஐரோப்பிய ஆயர் பேரவைகளில் தேசிய அளவில் இறையழைத்தலுக்குப் பொறுப்பானவர்கள் இவ்வியாழன்
முதல் 4 நாள் கருத்தரங்கை உரோமையில் நடத்தவுள்ளனர்.
34 ஐரோப்பிய ஆயர் பேரவைகளிலிருந்து
இறையழைத்தல் ஊக்குனர்கள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கு, இறையழைப்பின் நற்செய்தியை மீண்டும்
விதைத்தல் என்ற தலைப்பில் நடைபெறும்.
இறைவார்த்தை பற்றிய அண்மை உலக ஆயர்கள் மன்றமும்
புனித பவுல் ஆண்டும் முன்வைத்த, கிறிஸ்தவ அழைப்பில் இறைவார்த்தையின் முக்கியத்துவம் பற்றியும்
இக்கருத்தரங்கு விவாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது