இந்தோனேசியாவில் தேர்தல் வேட்பாளர்களின் அரசியல் சாதனைகளைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு
ஆயர்கள் வலியுறுத்தல்
ஜூலை01,2009 இந்தோனேசியாவில் இம்மாதம் 8ம் தேதி அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள வேளை,
வேட்பாளர்களின் அரசியல் சாதனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஓட்டளிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
கத்தோலிக்கத் திருச்சபை, ஒவ்வொரு வேட்பாளரின் சாதனைகளையும் அவர்களின்
தேர்தல் வாக்குறுதிகளையும் ஆய்வு செய்து பொது மக்களுக்குச் சமர்ப்பிக்க முயற்சித்து வருகின்றது.
இந்தோனேசியாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் அண்மை வாரங்களாக
அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதை முன்னிட்டு இம்முயற்சியில் இறங்கியுள்ளது கத்தோலிக்கத்
திருச்சபை