அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில்
பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.
சீடர்கள் அவரிடம் வந்து, ' ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம் ' என்று சொல்லி அவரை
எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, ' நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?
' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.
மக்களெல்லாரும், ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ? '
என்று வியந்தனர்