2009-06-27 15:38:58

34 புதிய பேராயர்களுக்குப் பால்யம்


சூன்27,2009. உலகிலுள்ள ஏழைத் திருச்சபைகளுக்கு உதவுவதற்கென அனைத்து ஆலயங்களிலும் இஞ்ஞாயிறுன்று இராயப்பர் காசு எடுக்கப்படுகிறது.

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவுக்கு முன்வரும் ஞாயிறன்று இராயப்பர் காசு எடுக்கப்படுகின்றது.

மேலும், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவான வருகிற திங்களன்று, கொழும்புவின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் மால்கம் இரஞ்சித் உட்பட 34 புதிய பேராயர்களுக்குப் பால்யம் வழங்குவார் திருத்தந்தை.

ஆசியாவிலிருந்து மூவர், ஆப்ரிக்காவிலிருந்து ஆறு பேர், தென் அமெரிக்காவிலிருந்து ஏழுபேர், வட அமெரிக்காவிலிருந்து 10 பேர், ஐரோப்பாவிலிருந்து 8 பேர் என 34 புதிய பேராயர்கள் திருத்தந்தையிடமிருந்து பால்யம் என்ற கழுத்துப்பட்டையைப் பெறுவர்.

 








All the contents on this site are copyrighted ©.