2009-06-26 15:45:14

இலங்கை அகதிகள் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆறு கத்தோலிக்கக் குருக்கள் விடுதலை செய்யப்படுமாறு யாழ்ப்பாண ஆயர் வேண்டுகோள்


சூன்26,2009. இலங்கை அகதிகள் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆறு கத்தோலிக்கக் குருக்கள் விடுதலை செய்யப்படுமாறு யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிற்குள்ளே புலம் பெயர்ந்த மக்களுக்கான மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நான்கு யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் மற்றும் இரண்டு அமலமரி தியாகிகள் சபைக் குருக்களை விடுதலை செய்யுமாறு யாழ் ஆயர் விடுத்த விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

இறுதி கட்ட போர் வரை தமிழ் மக்களோடு வாழ்ந்து தன்னலமின்றி அவர்களுக்காக உழைத்த இக்குருக்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆசிய செய்தி நிறுவனமும் அழைப்புவிடுத்துள்ளது.

இலங்கையின் இறுதி கட்ட போரில் ஏறத்தாழ 25 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர் மற்றும் தற்சமயம் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் முகாம்களில் வாழ்கின்றனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது







All the contents on this site are copyrighted ©.