2009-06-22 14:59:21

துன்பங்கள் பற்றிப் புரிந்து கொள்வதற்கு இறைவனின் மீதான விசுவாசம் இன்றியமையாதது, திருத்தந்தை


சூன்22,2009 துன்பங்கள் பற்றிப் புரிந்து கொள்வதற்கு இறைவனின் மீதான விசுவாசம் இன்றியமையாதது என்றும் திருத்தந்தை கூறினார்.

புனித பாத்ரே பியோ தொடங்கிய மருத்துவமனையின் இயக்குனர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை ஞாயிறன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நோயாளிகளுக்குச் அளிக்கும் சிகிச்சையானது கடவுளின் எல்லையற்ற இதமான கருணையில் பிள்ளைக்குரிய நம்பிக்கையிலிருந்து ஒருபொழுதும் பிரிக்கப்படக் கூடாது என்று கூறினார்.

துன்பங்களிலிருந்து விடுதலைக்கான இல்லம் என்ற பெயரில் இயங்கும் இம் மருத்துவமனை புனித பாத்ரே பியோவால் 1956ல் தொடங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.