வழிபாட்டு ஆண்டின் 12 ஆம் ஞாயிறு . நற்செய்தி மாற்கு 4, 35-41. 200609.
மாற்கு நற்செய்தி அதிகாரம் 4 , 35 – 41 .
35 அன்றொரு நாள்
மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36
அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள்.
வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள்
படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ
படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே!
உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து
காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது;
மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்?
உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம்
கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு
ஒருவர் பேசிக் கொண்டார்கள்.