புனித ஜான் மரிய வியான்னி, உலகின் மீட்புக்காகத் தன்னையே வழங்கும் தகுதியுடையுடையவராகத்
திகழ்ந்தார், பேராயர் பியாச்சென்சா
சூன்19,2009. குருக்களுக்கு ஓர் அசாதரண எடுத்துக்காட்டாய் விளங்கும் புனித ஜான் மரிய
வியான்னி, உலகின் மீட்புக்காகத் தன்னையே வழங்கும் தகுதியுடையுடையவராகத் திகழ்ந்தார் என்று
திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் பேராயர் மவ்ரோ பியாச்சென்சா கூறினார்.
சர்வ
தேச குருக்கள் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்ட கடிதம் பற்றிப்
பேசிய பேராயர் பியாச்சென்சா, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளது போல, ஒப்புரவு திருவருட்சாதனத்தைக்
கேட்கும் இடங்கள் காலியாக விடப்படாமல் இருப்பதில் குருக்கள் எப்பொழுதும் கவனமாக இருக்க
வேண்டும் என்றார்.
இவ்வாண்டின் நிறைவாக உரோமையில் 2010ம் ஆண்டு சூன் 9,10,11 ஆகிய
தினங்களில் குருக்களுக்கான சர்வதேச மாநாடும் இறுதியில் வத்திக்கான் பேதுரு வளாகத்தில்
திருத்தந்தையுடனான சந்திப்பும் இடம் பெறும் என்றும் அவர் அறிவித்தார்.
ஒப்புரவு
திருவருட்சாதனத்தின் ஆழத்தை உணர்த்தும் நோக்கத்தில் இவ்வாண்டில் அத்திருவருட்சாதனம் பற்றிய
வழிமுறைகள் அடங்கிய ஏடும் திருப்பீடத்தின் குருக்கள் பேராயத்தால் வெளியிடப்படும் எனவும்
பேராயர் பியாச்சென்சா கூறினார்.
இன்னும், வத்திக்கான் பேதுரு வளாகத்தில் இவ்வெள்ளி
இரவு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கருத்துக்களுக்காகச் செப வழிபாடும் இடம் பெறுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.